திருமலை பிரஹ்மோற்சவம் 2025 – முதல் 8 நாட்களின் சிறப்புகள்
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙏
அறிமுகம்
திருமலை பிரஹ்மோற்சவம் ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளுக்காக ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடத்தப்படும் திருவிழாவாகும். இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இவ்விழாவில், பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களை அருள்பாலிக்கிறார்.
‘பிரஹ்மோற்சவம்’ என்பது “பிரம்மனால் செய்யப்பட்ட உத்சவம்” என்ற பொருளை தருகிறது. இறைவனின் மகிமையை வெளிப்படுத்தும் விரிவான சடங்குகள், ஊர்வலங்கள் மற்றும் திவ்ய வாகன சேவைகள் மூலம் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த பதிவில் முதல் 8 நாட்களின் சிறப்பம்சங்கள் பகிரப்பட்டுள்ளன
நாள் 1 – செப்டம்பர் 24: த்வஜாரோஹணம் & பெரிய சேஷ வாகனம்
மாலை 5 மணிக்கு நடைபெற்ற த்வஜாரோஹணம் மூலம் பிரஹ்மோற்சவம் தொடங்கியது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன், நீல-தங்க வஸ்திரத்தில் அலங்கரித்து, பெருமாள் எழுந்தருளினார்.
சிறப்பு நிகழ்ச்சி – ஆந்திரப் பிரதேச முதல்வர் பட்டுப் பட்டு வாஸ்திரம் சமர்ப்பிப்பு
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ந. சந்திரபாபு நாயுடு, அரசின் சார்பில் பெருமாளுக்கு பட்டு வாஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.
வேத மந்திர ஓசையுடனும் நாதஸ்வர இசையுடனும், வாஸ்திரங்களைத் தலையில் சுமந்து மகாத்வார வாசல் வழியாக எம்ரபெருமானைச் சந்தித்தார்.
இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி.
பிங்க் மற்றும் ஊதா வஸ்திரத்தில், ஆதிசேஷனின் மீது ஆசனமர்ந்து எழுந்தருளினார்.
பொருள்:
த்வஜாரோஹணம் – உத்திரவிழாவின் தொடக்கச் சின்னம்.
பெரிய சேஷ வாகனம் – பக்தர்களைக் காப்பாற்றும் தெய்வீக சக்தி.
நாள் 2 – செப்டம்பர் 25: சின்ன சேஷா & ஹம்ஸா வாகனம்
காலை 8 மணி – சின்ன சேஷா வாகனத்தில் நீல வஸ்திரம் அணிந்து மலையப்ப சுவாமி எழுந்தருளினார். குருவாயூரப்பன் திருக்கோலமாக பக்தர்கள் கண்டனர்.
மாலை 7 மணி – ஹம்ஸா வாகனத்தில் வெள்ளை-செம்மஞ்சள் வஸ்திரத்தில், வீணை ஏந்தி ஞானத்தை அருளினார்.
பொருள்:
சின்ன சேஷா வாகனம் – பக்தர்கள் அருகிலிருந்து தரிசிக்க வாய்ப்பு.
ஹம்ஸா – சுத்தம், ஞானம்.
நாள் 3 – செப்டம்பர் 26: சிம்ம & முத்த்யாப்பு பந்திரி வாகனம்
சிம்ம வாகன சிறப்புகள்
காலை 8 மணி – சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராய் எழுந்தருளினார். பக்தர்களைக் காப்பதற்காக வந்தார் என்பதை நினைவூட்டும் நிகழ்ச்சி.
நரசிம்மா சரித்திரம் நினைவூட்டும் நிகழ்ச்சி.
முத்த்யாப்பு பந்திரி வாகனம் சிறப்புகள்
மாலை 7 மணி – முத்த்யாப்பு பந்திரி வாகனத்தில் முத்துகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார்.
தாயார்கள் ரோஜா வஸ்திரத்தில், மலர், ஆபரண அலங்காரத்தில் பவனி. மலையப்பர் காளிங்கநர்த்தனக் கோலத்தில் தோன்றினார்.
நாள் 4 – செப்டம்பர் 27: கற்பகவிருட்ச & சர்வபூபால வாகனம்
கற்பகவிருட்ச வாகனம் சிறப்புகள்
காலை 8 மணி – கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி.
சொர்க்கத்தில் இருக்கும் இந்த விருட்சம் பக்தர்கள் ஆசைகள் நிறைவேற்றும். ஆனால் எல்லோரும் கற்பகவிருட்சதை வணங்க முடியாது.
எனவே கற்பகவிருட்சமே தாம் என்று எடுத்துக் உரைக்கும் வண்ணமாக இங்கு பக்தர்களை நோக்கி வந்து ஆசீர்வதிக்கின்றான்.
நீல-பிங்க் வஸ்திரத்தில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி போல எழுந்தருளினார். பின்பு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
சர்வபூபால வாகனம் சிறப்புகள்
மாலை 7 மணி – சர்வபூபால வாகனத்தில், எல்லா உலகங்களுக்கும் அதிபதி என பெருமாள் பவனி.
பாகாசுர வதம் – கிருஷ்ணா லீலையில் பிருந்தாவன் மக்களை/பக்தர்களைக் காப்பாற்றிய லீலையை நினைவூட்டும்.
அன்று ஆண்டாள் சூட்டிய கிளி மாலை திருமலையில் வந்தடைந்தது என்பது சிறப்பம்சம்.
மூலவருக்கு இந்த கிளி மாலையை சாற்றுவர்கள்.
---
நாள் 5 – செப்டம்பர் 28: மோகினி அவதாரம் & கருட வாகனம்
மோகினி அவதாரம் சிறப்புகள்
காலை – திவ்ய பிரபந்தம் கோஷ்டி.
மலையப்ப சுவாமி நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி வடிவம்) எழுந்தருளினார்.
திருப்பாற்கடல் கடைந்த சமயம், அமிர்தத்தைத் தெய்வங்களுக்கு வழங்க வந்த மோகினி அவதாரம் நினைவூட்டப்பட்டது.
மேலும் நவநீத நர்த்தனக் கிருஷ்ணராகவும் எழுந்தருளினார்.
வெள்ளை-ஊதா வஸ்திரத்தில், ஆண்டாள் நாச்சியாரின் கிளி மாலையுடன் பக்தர்களை அருள்பாலித்தார்.
கருட வாகன சிறப்புகள் :
மாலை 6.30PM மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அற்புதமாக பிரகாசமாக திகழ்ந்தார்.
பெருமாள் மிகவும் தெய்வீகமாக தோற்றமளித்தார், அழகிய சிவப்பு உடையில், விலைமதிப்பற்ற மாணிக்கம் போல ஒளிர்ந்து மகிழ்ந்தார். பல லட்சம் பக்தர்கள் திருவிழாவை பின்தொடர்ந்தனர், முழு காட்சி வைகுண்டம் போலவே தோன்றியது.
பெரியதிருவடி (கருடத்தில்) பெருமாள் காண்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது.
கருட வாகனத்தை காண்பதால் அனைத்து பாவங்களும் அழிக்கப்படுவதாகவும், பக்தர்களுக்கு முடிவில்லா வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பெருமாள்கு பெரிய சேவைக்கான ஆக இருக்கும் கருடனுக்கு பல்லாண்டு கூறுவோம்.
நாள் 6 –செப்டம்பர் 29 ஹனுமந்த வாகனம், ஸ்வர்ணரதோஸ்தவம் மற்றும் யானை வாகனம்
ஹனுமந்தா வாகனம் சிறப்புகள்:
ஆறாவது நாளில் காலை 8 மணிக்கு, திருமலை மடத்தில் பரம பக்தியுடன் கோஷ்டி ஜீயர் சுவாமி தலைமையில் திவ்யப்பிரபந்தத்தின் பாசுரங்கள் செவ்வக பத்து திருவிழா தொடங்கியது.
மல்லையப்பா கோதண்ட ராமராக, பச்சை வஸ்திரத்தில் பரப்பிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டு, ஹனுமந்த வாகனத்தில் மட வித்திகள் முழுவதும் பயணம் செய்தார்.
கைங்கரியபாரர்கள், பாடகர்கள், நடனக்கலைஞர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இவ்விசேஷமான ஸ்ரீராமனின் அபூர்வ காட்சி காண, மனமார்ந்த மகிழ்ச்சியோடு பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.
ஸ்வர்ண ரத்தௌத்சவம் சிறப்புகள்
ஆறாம் நாள் மாலை 4 மணிக்கு, அபரிமிதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்வர்ண ரதத்தில் மாடவீதிகளில் உலா வருகிறார்.
ஸ்வர்ண ரத வாகனம் இராவண வதத்தை நினைவூட்டுகிறது.
இதிகாசங்களில் வருவதுபோல, போரின் போது தேவராஜா இந்திரன், இலக்குமணனுடன் இராமனுக்கு ஸ்வர்ண ரதம் அருளினார்.
தங்க தேரில் பெருமாளை செவ்விக்கும் பொது கீதாச்சாரியனாக அவனை காண்கிறோம்.
ருக்மிணி ஹரன் சமயத்தில் பெருமாள் ருக்மிணி பிராட்டியை கவர்ந்து சென்று அந்த ஸ்வர்ண தேரில் அழகை நாம் காண்கிறோம்.
ஊர்வலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு வாகன சேவையிலும் பங்கு பெறும் அந்த திவ்ய யானைகளின் மேன்மையான வருகை, உத்சவம் சிறப்பை இன்னும் உயர்த்தியது.
கஜேந்திர வாகனம் சிறப்புகள் :
மாலை 7 மணிக்கு, திருமலையில் யானை வாகனம் ஊர்வலம் நடைபெறுகிறது .
இந்த வாகனம் கஜேந்திர மோக்ஷம் நிகழ்வை நினைவூட்டுகிறது; எம்பெருமான் முதலைக்கட்டியில் சிக்கிய யானை கஜேந்திரனை மீட்டு, பக்தர்களுக்கு தன்னுடைய கிருபையும் கருணையும் வெளிப்படுத்துகிறார்.
மலையப்ப சுவாமி தங்க வஸ்திரத்தில் பிரகாசிக்கிறார்.
நாள் 7 , செப்டம்பர் 30 சூர்யா பிரப்ஹை வாகனம் மற்றும் சந்திரா பிரபை வாகனம்
சூர்யா பிரபை வாகனம் சிறப்புகள் :
ஆண்டாள் சொல்வது போல், “கதிர்மதியான் போல முகத்தன்” —சூரிய ஒளியினால் பிரகாசிக்கும் முகம் போலவே, அவரின் முகம் ஒளிர்கிறது.
அவர் சூரியநாராயணன், உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி, அனைத்துப் பிராணிகளுக்கும் ஆதாரமானவர்.
அவர் மோக்ஷ தரிப்பவர், ஜீவாத்மா வின் எல்லா செயல்களையும் காணும் சூரியனும் ஆவார்.
பெரியவர்கள் (பூர்வாச்சரியர்கள்) சொல்வதுபோல், ஆதித்ய ஸ்தோத்திரம்(சூர்யா நாராயண )தடைகள் அல்லது இடையூறுகள் நேரும் போது செவிப்பார்கள்.
அவர் உலகத்தை பாதுகாக்கும் பெருமாள், ஆனால் ராமராக அவதரித்து ஆதித்ய ஹ்ருதயம் செவித்து ராவணனை வென்றார்.
சூரிய ஒளி நமது உடலை குணப்படுத்தும்; ராமர் நாமம் ஜபம் மனதை சாந்தியடையச் செய்கிறது. சூரியகுளத்தில் பிறந்து இப்போது அந்தர்யாமி ஆக, அவர் ஒவ்வொரு உயிரையும் வழிநடத்துகிறார்.
அந்த ராமர் இப்பொழுது, திருமலை அப்பன் ஆக சிவப்பு மற்றும் நீல வஸ்திரம், அனைத்து நகைகளால் அலங்கரித்து பிரகாசமாக ஒளிர்கிறார்.
சூரியன் மடவீதியில் இறங்கியதுபோல் அவரின் அருளை அனுபவிக்கலாம்.
பிறகு இரண்டாவது நாளில் ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
,
சந்திரா பிரபை வாகனம் சிறப்புகள் :
மாலை 7 மணிக்கு, மலைப்பா ஸ்வாமி, வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்தில், மென்மையான சந்திர ஒளியை வெளிப்படுத்தும் சந்திர பிரபை வாகனத்தில் அமர்ந்து, அமைதியான சூழலை மேலும் ஒளிரச் செய்தார்.
ருக்மிணி தனது கடிதத்தில் ("புவனசுந்தரா") என்று கூறுவது போல, — வெள்ளை உடையில் பிரகாசிக்கும் அழகுடன், அவர் பவனி வந்தார்.
திருப்பாணழ்வார் சொல்வது போல், “கொண்டல்வண்ணைக் கோவலனை வெண்ணை உள்ள வாயன் என் உள்ளம் கவர்ந்தான்”.பக்தர்களின் இதயத்தை அவர் கொள்ளை அடிக்கிறார்.
இதுவரை நடந்த 7 நாட்களின் சிறப்புகள். மீதமுள்ள நாட்களின் (செப் 30- அக் 2) நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த பதிவுகளில் பகிரப்படும்.
நாள் 8 , ரதோத்ஸவம் மற்றும் அஷ்வா வாகனம்.
“Keśava puṣpa, Sarva pāpe pramuktate” 🌸
அதாவது, ரதோற்சவத்தில் பகவானை தரிசிப்பது, கேசவனுக்கு எண்ணிலடங்கா பூஜைகள் செய்வதற்குச் சமம். அது பக்தர்களை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறது.
திருத்தேரை இழுப்பது, மிகப் பெரிய கைங்கர்யமாக கருதப்படுகிறது. யாராவது கயிற்றைத் தொட்டு இழுப்பாரோ, அவர் எம்பெருமானின் அடியாராகி, தெய்வத்தை உடலாலும் மனதாலும் அணுகுகிறார் என்று நம்பப்படுகிறது.
தேரை இழுக்கும் அந்த நேரத்தில், பக்தர் தம்மை முழுமையாக எம்பெருமானின் திருவடிகளுக்கே சமர்ப்பித்துவிடுகிறார்.
இந்த நிகழ்வு, பகவத்கீதையின் அத்தியாயத்தை நினைவூட்டுகிறது:
“சர்வ-தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் சர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”
“எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை மட்டும் சரணாகதி அடை. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் காப்பாற்றுவேன்; கவலைப்படாதே.”
திருவேங்கடமுடையான், நீல-இளஞ்சிவப்பு வஸ்திரம் அணிந்தபடி, பச்சை நிற வஸ்திரம் சிறப்பாக அலங்கரித்த ஸ்ரீதேவி, பூதேவியருடன் இருபுறமும் அமர்ந்து, ஆனந்தமாகத் திருத்தேரில் வீற்றிருந்தார்.
அஷ்வா (குதிரை) வாகனம் சிறப்புகள்:
இன்று மாலை 7 மணிக்கு, மலையப்பசாமி ஆனந்தமாக அஷ்வ (குதிரை) வாஹனத்தில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா!” என பாடி, இந்த அபூர்வ தரிசனத்தை ஆச்சரியத்தோடு கண்டனர்.
இன்று எம்பெருமான் கிருஷ்ணன் திருக்கோலத்தில் பக்தர்களை அருள்பாலித்தார்.
குதிரை வீரியம், ஆற்றல், வேகம் ஆகியவற்றை குறிக்கிறது. எப்போதெல்லாம் எம்பெருமான் இந்த வாஹனத்தில் எழுந்தருளுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் தர்மத்தை காக்கும் வீரராகவும், அசுர சக்திகளை அழிக்கும் பரமாத்மாவாகவும் வெளிப்படுகிறார்.
அந்தர்யாமியாக அனைத்து உயிர்களிலும் இருக்கும் இவர், எப்போதும் நம்மை சரியான பாதைக்கு நடத்துபவர்.
நீல-சிவப்பு வஸ்திரம் அணிந்து, பொலிவுடன் ஒளிரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பசாமி, வெண்குதிரையில் மிகுந்த தேஜஸுடன் வீற்றிருந்தார்.
அவருக்கு இணையானவர் யாருமில்லை.எப்போதும் தம் பக்தர்களைக் காப்பாற்றும் இந்த கோவிந்தனுக்குப் பல்லாண்டு! 🙏
அக்டோபர் 2 – சக்ரஸ்நானம் மூலம் விழா நிறைவடையும்.
காலை சுவாமியின் சுதர்சன சக்ரம், வேத மந்திரப் பாடல்கள், பக்தி பாடல்கள் மற்றும் நாதஸ்வரம் இசையின் அழகிய தாளங்களில், ஸ்வாமி பூஷ்கரிணியில் பவித்ர நீராடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பவித்ரமான சுதர்சன சக்ரம், அனைத்து அடியார்களின் பாவங்களை நீக்கி, பக்தர்களை இறைவனுக்கு அருகாக்கும் தன்மை கொண்டது. இன்று நாம்கள் சக்ர தீர்த்தத்தை ஸ்வாமி பூஷ்கரிணியில் நேரில் காண்கிறோம்; தெய்வீக அருளில்(சக்ரா திருமஞ்சனம் செய்து), ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.
பக்தர்கள் இந்த பவித்ரமான நிகழ்வைக் காண்பதால், இறைவன் பாதுகாப்பும் அருளும் பெறப்படுவதை, இது ஒரு பெரிய பெரும் பாக்யம் எனக் கருதப்படுகிறது.
சிறப்பான கோரிக்கை:
🙏 அடியர்கள், தயவுடன் உங்கள் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை கருத்துப் பகுதியில் பகிரவும். உங்கள் அருளும் ஆசீர்வாதங்களும் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.























.jpg)








Good
ReplyDelete